சென்னை: கோவையில் யானை வழித்தடத்தில் தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகள் தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் யானை வழித்தடம் என அறிவிக்கப்பட்ட 38 வழித்தடங்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யக் கோரி மனு ஐகோர்டில் தொடரப்பட்டது. அந்த வழக்கில், கல்லாரில் யானை வழித்தடத்தில் உள்ள தோட்டத்தை காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்த வழக்கு ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.