இந்நிலையில் நேற்று மாலை செங்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது கட்அவுட்டில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் ெஜ.ஐயப்பன் மற்றும் எஸ்.ஐயப்பன் ஆகியோர் கட்அவுட்டில் ஏறி மின்விளக்குகள் பழுதை சரிசெய்ய முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்விளக்குகளில் இணைத்திருந்த மின் வயர் அறுந்து இருவர் மீதும் விழுந்தது.
இதில் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த மக்கள் இருவரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து, செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கியதில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.