மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியாக உள்ளது.

இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஜி.செல்வம் தலைமையில் அரசு தலைமை செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. தேர்வு குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் 16.08.2024 அன்று மாலை 6 மணி வரை வரவேற்கப்பட்டது. எனினும் தேர்வு குழுவின் முடிவின்படி, தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பு வருகிற 31.08.2024 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகி

Related posts

புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை!

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல்