கடையில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து, அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சகாயராவினின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.