மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் சிபி என்பவருக்கு சொந்தமான வாட்டர் வாஷ் கடை உள்ளது. இந்த கடையில் திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சகாயராவின் (28) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் கடைக்கு வந்த, வாகனம் ஒன்றை கழுவுவதற்காக மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது, திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.

கடையில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து, அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சகாயராவினின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு