இதனையடுத்து, பொதுமக்களிடையே மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்றனர். மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மின்சார சேமிப்பு குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும், பயன்படுத்த வேண்டிய மின் சாதனங்கள் குறித்தும் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.