பூந்தமல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போரூர் மின்வாரியம் சார்பில், மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போரூர் செயற்பொறியாளர் மாணிக்கவேலு தலைமையில், போரூர் சிக்னல் அருகே நேற்று நடைபெற்றது. இதில், சென்னை தெற்கு மேற்பார்வை பொறியாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பொதுமக்களிடையே மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, பொதுமக்களிடையே மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்றனர். மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மின்சார சேமிப்பு குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும், பயன்படுத்த வேண்டிய மின் சாதனங்கள் குறித்தும் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.