நாட்டின் மின்நுகர்வு 847 கோடி யூனிட்

புதுடெல்லி: ஒன்றிய மின்சார துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2023-24ம் நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் நாட்டின் மின்நுகர்வு 847 கோடி யூனிட்டாக 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2022-23ம் நிதியாண்டின் இதே கால கட்டத்தில் 786 கோடி யூனிட்டாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த 6 மாதங்களில் அதிகபட்ச மின்சார பயன்பாடாக 241 ஜிகா வாட் பதிவாகி உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 215.88 ஜிகா வாட்டாக பதிவானது. கடந்த ஜூன் மாதம் 224.1 ஜிகா வாட் ஆக இருந்த மின் தேவையின் அளவு ஜூலையில் 209.03 ஜிகா வாட்டாக குறைந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 239.19 ஜிகா வாட்டாகவும் செப்டம்பரில் 240 ஜிகா வாட்டாக அதிகரித்தது என்று ஒன்றிய மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!