சென்னை: புயல் பாதித்த 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான வீடுகளில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் மின்கணக்கீடு செய்வதில் சிரமம் காரணமாக அக்டோபர் மாத மின்கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிதமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டிசம்பரில் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.