சிவகங்கை: மின் ஊழியரை தாக்கிய சிங்கம்புணரி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் செலுத்தாததால் பீயூஸ் கேரியரை எடுத்து மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மின்வாரிய உதவியாளர் முகமது சுல்தானை தாக்கி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெகன் கடுமையாக பேசியுள்ளார். மின் ஊழியர்கள் அளித்த புகாரை அடுத்து சிங்கம்புணரி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.