மின்கசிவு காரணமாக ஐடி நிறுவன கேன்டீனில் திடீர் தீ

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் மின் கசிவு காரணமாக ஐடி நிறுவன கேன்டீனில் நேற்று மாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், ஐடி நிறுவன ஊழியர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் சன்டெக் பார்க்’ என்கிற ஐடி நிறுவனம் உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின், 9வது மாடியில் கேன்டீன் வசதி உள்ளது. இங்கு ஒரு அறையில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ பிடித்தது. சில நிமிடத்தில் கேன்டீனில் தீ பரவியது. உடனே கேன்டீனில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் சுதாரித்து கொண்டு 8 தளங்களில் பணி புரிந்து கொண்டிருந்த ஐடி ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.

இது குறித்து தகவலறிந்த துரைப்பாக்கம், மேடவாக்கம், திருவான்மியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை செய்ததில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!