இந்நிலையில், நேற்று மாலை திடீரென பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ பிடித்தது. சில நிமிடத்தில் கேன்டீனில் தீ பரவியது. உடனே கேன்டீனில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் சுதாரித்து கொண்டு 8 தளங்களில் பணி புரிந்து கொண்டிருந்த ஐடி ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.
இது குறித்து தகவலறிந்த துரைப்பாக்கம், மேடவாக்கம், திருவான்மியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை செய்ததில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.