வீட்டின் மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

ராமநாதபுரம்: வீட்டின் மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் மலைச்சாமி கைது செய்யப்பட்டார். கடலாடி தாலுகா காவாகுளம் கிராமத்தை சேர்ந்த அம்மாசி என்பவர், மின் இணைப்பு பெற மலைச்சாமியை அணுகியுள்ளார். சிக்கல் மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் உதவி மின்பொறியாளர் மலைச்சாமி ரூ.7000 லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் போது லஞ்சம் வாங்கிய மலைச்சாமி கையும் களவுமாக பிடிபட்டார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா