விரைவு ரயில் மோதியதில் மின் ஊழியர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(52). இவர், அதே பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் வாரியத்தில், கடந்த 5 ஆண்டுகளாக மின்சார ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கோவிந்தராஜ் பணியின் காரணமாக செல்ல வேண்டி நேற்று இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தை கடக்க முயன்றார்.

அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்த விரைவு ரயில் மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், மின்சார ஊழியர் கோவிந்தராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு