மின்கசிவால் வீட்டில் தீ தம்பதி கருகி பரிதாப பலி

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மாத்தூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (70). இவரது மனைவி அகிலாண்டம் (65). இவர்களுக்கு பெரியசாமி (48), பூமலை (46), செந்தில் (45), அய்யாசாமி (42) ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இந்த நான்கு பேருக்கும் திருமணமாகிவிட்டதால் தனி வீட்டில் வசித்து வருகின்றனர். சீனிவாசன், அகிலாண்டம் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக அகிலாண்டத்திற்கு உடல்நிலை சரியில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டனர். அப்போது சுமார் 11 மணியளவில் மின்கசிவின் காரணமாக கூரைவீடு திடீரென தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. சீனிவாசன், அகிலாண்டம் இருவரும் தீயில் எரிந்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு