சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக இருப்பவர் சின்னமனூரை சேர்ந்த சுந்தரி(50). இவர் அரசு பணியில் சேர 10ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. அவரது சான்றிதழை ஆய்வு செய்ததில் சான்றிதழ் போலியானது என தெரியவரவே செயற்பொறியாளர் சந்திரமோகன் சுந்தரியை சஸ்பெண்ட் செய்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.