டெல்லி : தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை வங்கிகள் வெளியிடாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம், நன்கொடை அளித்தோர் விவரங்களை வெளியிட உத்தரவிட்டது. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தோர் விவரம் வெளியிடப்படாது என திட்டம் தொடங்கியபோது வங்கிகள் உறுதி அளித்து இருந்தது. எனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் வங்கிகள் சட்டப்படி வாடிக்கையாளர் விவரங்கள் வெளியிடப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.