6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 எம்எல்ஏ தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு: I.N.D.I.A கூட்டணிக்கு முதல் டெஸ்ட்

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது I.N.D.I.A கூட்டணிக்கு முதல் டெஸ்ட்டாக எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒன்றிய பா.ஜ அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த நிலையில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் உத்தரபிரதேசத்தில் கோசி தொகுதி, திரிபுராவில் உள்ள தன்பூர், போக்ஸாநகர், ஜார்கண்டின் டும்ரி, உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதே சமயம் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்களை மற்ற கட்சியினர் நிறுத்தி உள்ளனர்.மறைந்த முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி 50 ஆண்டுகளாக வென்று வந்த புதுப்பள்ளி தொகுதி இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மனை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் ஜேக் தாமஸ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதிகளில் செப்டம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சோதனை அடிப்படையில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் பா.ஜவுக்கு எதிராக 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி உள்ளதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு