தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைக்கும் அளவில் போட்டியிட்டு இருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும் இந்த தோல்வியை படிக்கல்லாக மாற்றி வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைத்து, 2026 சட்டமன்ற தேர்தலை நமது இலக்காக வைத்து, இப்போதிருந்தே உழைத்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக தயாராவோம். மேலும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.