டெல்லி: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என அறிவித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மேத்யூஸ் நெடும்பரா மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மறுத்து மேத்யூஸ் நெடும்பராவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.