இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் வீட்டின் அருகே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர். சிலர் போலி ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.