தேர்தல் தோல்வி எதிரொலி தாய்லாந்து பிரதமர் அரசியலை விட்டு விலகல்

பாங்காங்: தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பிரதமராக இருந்தவர் பிரயுத் சான் ஓச்சா. இவர் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டர்ர. ஆனால் இவரது கட்சி வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் அரசியல் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,‘‘ யுனைடட் தாய் நேஷன் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதின் மூலமாக நான் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றம் நாளை புதிய பிரதமரை தேர்வு செய்ய உள்ள நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் பிரயுத் அறிவித்துள்ளார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி