இந்த நிலையில் சிவகங்கை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான சந்திப்பு நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள்-எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொகுதிப் பார்வையாளர்கள் பாக அளவிலான பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்கள் மத்தியிலான ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டும். நடைபெற இருப்பது மக்களவைத் தேர்தல் என்றாலும், இது மாநிலங்களை காப்பதற்கான தேர்தல் என்பதை உணர்ந்து வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வலியுறுத்தப்பட்டது. மாலையில் தென்காசி, திருநெல்வேலி தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.