தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்த விதிகளின் படி ஒன்றிய சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு தேர்தல் ஆணையர் பதவிக்கான 5 அதிகாரிகளின் பெயர்களை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யும். பிரதமர் தலைமையிலான தேர்வு குழு அதில் இருந்து ஒரு அதிகாரியை தேர்வு செய்யும். கடந்த 7ம் தேதி கூட்டம் ரத்தானதால் புதிய ஆணையரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமாரும் தேர்தல் ஆணையராக அருண் கோயல் ஆகிய இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.