இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘பாட்னாவில் நாட்டின் மிகப் பெரிய அறிவியல் நகரம் 17 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இங்கிலாந்தில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தை பார்வையிட முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அதனால் முதல்வர் தலைமையிலான குழு வரும் 7ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. பீகார் அருங்காட்சியகத்தைப் போலவே அறிவியல் நகரமும் உலகத் தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து இங்கிலாந்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்’ என்றன. லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நிதிஷ் குமார் இங்கிலாந்து செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.