இந்த ஆண்டு மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு வெறும் 1.78% மட்டுமே என தெரியவந்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்து இருப்பதையே இது குறிக்கிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிதி ஒதுக்கீட்டை குறைத்தது மட்டுமல்ல, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்த நிதித் தேவைகளையும் ஒன்றிய அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் வறுமை ஒழிப்பில் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என வாதிடும் ஒன்றிய அரசு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக சமிக்னை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.