வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும் மக்கள் நலனுக்கும் இடையேயானது: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து

டெல்லி: வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையேயானது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். ஜன.22-ல் அயோத்தியில் ராமர் கோயிலையும் பிப். 14-ல் அபுதாபியில் இந்துக் கோயிலையும் பிரதமர் திறந்து வைக்கிறார். 2 கோயில்களும் திறக்கப்பட்ட பின் இந்தியாவில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். 2009-ல் பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும் குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோடி காட்சிப்படுத்தப்பட்டார். அனைத்து இந்தியர்களுக்கும் மோடி வளர்ச்சியை கொண்டு வருவார் எனக் கூறப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்