தேர்தல் ஆணைய கூட்டம் தமிழக தேர்தல் அதிகாரி போலீஸ் டிஜிபி டெல்லி சென்றனர்

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் அனுப்சந்திர பாண்டே, அருண் கோயல் கலந்து கொள்ளும் கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் நடக்கிறது. அனைத்து மாநிலங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் டிஜிபிக்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

இதில் பங்கேற்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு நேற்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று மாலை 5.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை