காமராஜர் சாலையை கடந்தபோது போலீஸ் வாகனம் மோதி மூதாட்டி பரிதாப பலி: காவலர் கைது

சோழிங்கநல்லூர்: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மேரி (57). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், கலைஞர் நினைவிடங்களை சுற்றி பார்க்க வந்துள்ளார். அங்கு, நினைவிடங்களை சுற்றி பார்த்துவிட்டு மெரினா காமராஜர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து தலைமை செயலகம் நோக்கி வந்த, மாநில உளவுத்துறைக்கு சொந்தமான வேன், மூதாட்டி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் வேனை ஓட்டி வந்த காவலர் சத்தியமூர்த்தியை (28), கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் மெரினா காமராஜர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு