இதனையடுத்து, நேற்று காலையில் சோழவரம் காவல் நிலையத்தில், தனது அம்மா கன்னியம்மாள் காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலையில் வீட்டின் எதிரே உள்ள அருமந்தை ஊராட்சிக்கு சொந்தமான நல்ல தண்ணீர் குளத்தில் பெண் சடலம் மிதப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பெயரில் சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் காணாமல்போன கன்னியம்மாள் என தெரியவந்தது. பின்னர், சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி குளத்தின் அருகே நடந்து சென்றபோது நிலை தடுமாறி குளத்தில் விழுந்தாரா அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.