இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கொட்டகைகளை அமைக்க மறுப்பு தெரிவித்து வருவதால் தங்களின் விலை பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விலைப் பொருட்கள் அழகி வீணாகிறது. இதனால் எளாவூர் ரயில் நிலையம் அருகாமையில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு கடைகள் கட்டி சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்காதால் கடந்த 10ம் தேதி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் நேற்று திடீரென வியாபாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் இல்லாததால் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் ஜமாபந்திக்கு வரும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.