டெல்லி: ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு ஜூலை 31-ல் விசாரணைக்கு வருகிறது. உத்தவ் தாக்கரே தரப்பின் வழக்கை ஜூலை 31-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி வழக்கு தொடர்ந்துள்ளது.