முட்டை விலை 465 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் முட்டை விலையில் நேற்று, என்இசிசி மேலும் 10 காசு உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 465 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்ந்து வருவதாக பண்னையாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் மழையின் காரணமாக, முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் வரை உயர்ந்துள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது