Tuesday, July 2, 2024
Home » ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்தபோது என்னோட தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த… சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ

ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்தபோது என்னோட தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த… சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ

by Karthik Yash

சென்னை: ‘‘ஈழப்போரின் போது, ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்தபோது, நீ என்ன பண்ண… என்னுடன் தானே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த’’ என்று சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை விஜயலட்சுமிக்கும் இயக்குநர் சீமானுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கிடையே சீமான் தூண்டுதலின் பெயரில் மதுரை செல்வம் என்பவர் ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். அந்த புகாரின்படி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சீமான் நேற்று முன்தினம் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நடிகை விஜயலட்சுமிக்கு 6 பேருடன் தொடர்பு உள்ளது. என்னுடன் விஜயலட்சுமி இருந்ததற்கான ஏதாவது போட்டோ ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள்’’ என்று சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் தான் நடிகை விஜயலட்சுமி சீமான் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வேண்டாம் சீமான்… வேண்டாம். இப்ப கூட ரொம்ப தப்பான பாதையைத்தான் எடுத்துட்டு இருக்க. எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்கிற.. உனக்கு என்ன தகுதி இருக்கு. ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருக்கும் போது, என்னுடன் தானே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த. எல்லாம் வெளியில் வரத்தானே போகுது. நாவை அடக்கிக்கோ சீமான். ஒரு பெண்ணோட விஷயத்தில் கொஞ்சுமாவது மனச்சாட்சியுடன் நடந்துக்கோ.

எதிரில் மட்டும் நீ கிடைச்ச.. உன் பல்லை தட்டிக் குடுத்துருவேன். வேண்டாம் சீமான்… வேண்டாம். ஒரு பெண்ணோட விஷயத்தில் ரொம்ப விளையாடிட்டு இருக்க. ரொம்ப சிரிச்சிட்டு இருக்க. இப்ப 6 பேர் மேல நான் வழக்கு கொடுத்து இருக்கேன். நான் 6 பேருடன் குடும்பம் நடத்திட்டு இருக்கேனா. அப்புறம் எதுக்கு எனக்கு மார்ச் மாசத்துல இருந்து காசு போட வந்த. விளையாடிட்டு இருக்கியா. மக்களை ஏமாத்திட்டு இருக்கியா. என் காலில் இருக்கும் செருப்பை கழற்றி சாத்து சாத்துனு சாத்துவேன் சீமான். கொஞ்சமாவது நீ மனசாட்சியுடன் நடந்துக்கோ. இந்த மாதிரி பொய்களை சொல்லிக்கிட்டு மக்களை ஏமாற்றாதே.

திமுகவில் இருந்து எல்லோரையும் எதுக்கு இழுத்துக்கிட்டு வந்த. உனக்கு பேசுவதற்கு யோக்கியதை இல்லாமல். நீ வந்து என்னை ஏமாற்றிவிட்டு, இதன் பின்னால் அரசியல் இருக்கிறது என்று சொல்ற. எதிரே மட்டும் நீ கிடைச்ச சாத்து சாத்துனு சாத்திவிடுவேன் சீமான். இப்ப கூட உனக்கு காலம் மிஞ்சி போகவில்லை. ஒரு பெண் என்று மனதில் வைத்து, நியாயமாக எடுத்துக்கிட்டு போனேனா. இது நியாயமாக முடியும். இல்லேனா என்னை பற்றி நீ அவதூறு பேச பேச… நான் அடங்கவே மாட்டேன் சீமான். என்னை பற்றி உனக்கு தெரியும். அதனால விளையாட வேண்டாம். பேசும்போது என்ன பேசுறதுனு யோசித்து பேசு. போலீஸ் மட்டும் இல்லேனா, சென்னையில் முதலில் உன் வீட்டுக்கு வந்து சாத்து சாத்துனு சாத்துவேன்.

நான் அவ்வளவு கோபத்தில் இருக்கேன். வெறுப்பு ஏத்தாதே. என்ன பண்ணனுமோ உனக்கு தில்லு இருந்தா நீ நேர்மையாக பண்ணு. பிரஸ் மீட்டில உக்காந்து கேவலம்னு சொன்னா ஒரே அப்பு அப்பிடுவேன் சொல்லிட்டேன். ேவண்டாம் உனக்கு என்னை பற்றி தெரியும் என்று நினைக்கிறேன். என்னை கோபப்படுத்தாதே. அதை தான், நான் இந்த வீடியோ மூலம் உனக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன். கேவலம் கேவலம்னு நீ சொல்லிக்கிட்டே இருந்தனு நினைச்சுக்கோ. நேரில் பார்க்கும் போது மூஞ்சீல சாத்து சாத்துனு சாத்திவிட்டுவிடுவேன் பார்த்துக்கோ. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

20 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi