சென்னை: மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது. சமத்துவ இந்தியாவை பேணி காக்க வேண்டிய பெரும் பொறுப்பு, நாட்டின் எதிர்காலமான மாணவர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது.எல்லோருக்குமான இந்தியாவை உருவாக்க நினைத்த முன்னாள் பிரதமர் நேரு பெயரில் உள்ள ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.