கல்வியும், மருத்துவமும் திராவிட மாடலின் இரு கண்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3,300 அரசு பள்ளி மாணவர்கள் GLAT தேர்வு எழுத அரசே பயிற்சி வழங்கி உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன், மருத்துவ காப்பீடு திட்டங்களை பாராட்டி பத்திரிகைகளில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்…

நான் முதல்வன் திட்டம்

கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் CLAT தேர்வு எழுத அரசே பயிற்சி வழங்கி உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.4 ஆயிரத்தை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது. நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ காப்பீடு திட்டம்:

நாட்டிற்கே முன்னோடியாக 2009ல் தலைவர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16ல் தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது #CMCHIS-இல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது நமது கல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி