மாலை 5 மணியளவில் வீட்டுக்கு திரும்பிச் சென்றபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயலு பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.