இந்நிலையில், நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமலாக்க துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்ததால் புலன் விசாரணை பாதிக்கப்படும். மேலும் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளுக்கும் சிக்கல் ஏற்படும். எனவே உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.