சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எழும்பூரில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் பன்னீர், பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும்; விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.