சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கக் கூடாது என கூறி எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.