ஆனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில், கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கி ஜப்தி போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்று மிரட்டி உள்ளனர். 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.