ஆளுநருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என எடப்பாடி ஆளுநரிடம் மனு அளித்தார்.

 

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்