Thursday, June 27, 2024
Home » எடப்பாடி ஆட்சி கவிழாமல் தடுத்தோம்; ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நாங்கள்தான் உயிர் கொடுத்தோம்: கொளத்தூரில் அன்புமணி பேச்சு

எடப்பாடி ஆட்சி கவிழாமல் தடுத்தோம்; ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நாங்கள்தான் உயிர் கொடுத்தோம்: கொளத்தூரில் அன்புமணி பேச்சு

by Mahaprabhu

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியில் பாஜ வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து பாமக மாநில தலைவர் அன்புமணி பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் எனக் கூறுகிறார். உங்களை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் வைத்தது தான் நாங்கள் செய்த துரோகமா? 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்குச் சென்றார். அப்போது அனைவரும் அந்த அம்மாவிற்கு வாழ்க்கையே முடிந்து விட்டது, இனி அரசியலுக்கு அவர் வர முடியாது, அதிமுக அழிந்துவிட்டது என பேசினார்கள்.

இரண்டு ஆண்டுகள் கழித்து பாமக அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அப்போது நாங்கள் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் உயிர் கொடுத்தோம். ஜெயலலிதா முதலமைச்சராக வரவே முடியாது என்ற சூழல் இருந்த நேரத்தில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார். 2019ல் நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி முதலமைச்சராக தொடர்ந்து இருக்க முடியாது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 9 தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். அதில் ஐந்து தொகுதிகளில் எங்களால் வெற்றி பெற்றீர்கள். நாங்கள் இல்லை என்றால் அன்று உங்களது ஆட்சி கவிழ்ந்திருக்கும். அன்று உங்களுக்கும், உங்களது ஆட்சிக்கும் உயிர் கொடுத்தது நாங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi