இதுதொடர்பாக விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ் புகார் அளித்தார். புகாரின்பேரில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வனராஜ், முன்னாள் மேற்பார்வையாளர் ஜெயவீரன், முன்னாள் மேலாளர் முருகேசன், முன்னாள் தளவாய்புரம் பொறுப்பு தலைவர் தங்கமாரியப்பன், ராஜலிங்கம், பன்னீர்செல்வம், காளிராஜ், சிவா ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் தேடுதலை தொடர்ந்து அனைவரும் தலைமறைவாகினர்.
இவர்கள் ராஜபாளையத்தில் அவரவர் வீடுகளில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீசார் முருகேசன், ராஜலிங்கம், தங்கமாரியப்பன், பன்னீர் செல்வம், காளிராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, இருவரையும் மறு விசாரணைக்கு அழைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள சிவா என்பவரை தேடி வருகின்றனர்.