எடப்பாடி அறிவிப்பு புதுச்சேரியில் 16ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு மற்றும் நிலுவை தொகையை செலுத்துமாறு அறிவித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அதிமுக புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், வருகிற 16ம் தேதி (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்