எடப்பாடி சாகசம் நிகழ்த்துவார்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: விக்ரமாதித்தன் கதை போல எடப்பாடி பழனிசாமி மீண்டும் சாகசங்களை தொடர்ந்து நிகழ்த்துவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘ 2023ம் ஆண்டில் இருந்த விரும்பத்தகாத நிகழ்வுகள், புதிய வைரஸ் தாக்குதல் போன்றவை இந்த புதிய ஆண்டில் இல்லாமல் மகிழ்ச்சியான ஆண்டாக மலர வேண்டும். அதிமுகவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்குகிற வகையில், விக்ரமாதித்தன் கதை போல எடப்பாடி மீண்டும் சாகசங்களை தொடர்ந்து நிகழ்த்துவார்’என்றார்.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது