எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இதை விட மோசமான நிகழ்வுகளெல்லாம் நடந்துள்ளது. திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண நிகழ்வை திட்டமிட்டு சிலர் நடத்தியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதில், அதிமுக, பாஜவுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய நிகழ்வை கண்டித்தும், பரிபூரணமான மதுவிலக்கை வலியுறுத்தியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜூலை மாதம் 2ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.