தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வர அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது: அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டி..!

தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வர அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது: அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை..!

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை; பிரதமர் மோடியை போலவே எடப்பாடி பழனிசாமியும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியை பெற்று அதிமுகவை வழிநடத்தி கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக அனைத்து தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது. நான்கு ஆண்டு காலம் தமிழகத்தையும், அதிமுகவை காப்பாற்றியவர். அவருக்கு அத்தனை தகுதியும் இருக்கிறது.

காமராஜர் அவர்களுக்கு பாரத பிரதமர் ஆவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார். மூப்பனாருக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு காரணம் திராவிட கழகம்தான் என்று அமித்ஷா சொல்லி இருக்கின்றார். அதோடு அவர் பேட்டி கொடுக்கும்போது வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவார் என்பதே பாஜகவின் கொள்கை என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் இப்போது பாஜகவுடன் கூட்டணி இருக்கின்றோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காகதான்

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!