இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த சொத்து ஜெயலலிதாவின் வாரிசுகளையே சேரும் என்று உத்தரவிட்டு வேதா நிலையத்தின் சாவியை அவரின் சட்ட பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி வேதா நிலையத்தின் சாவி ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் செயல்படாத நிலையில் அச்சட்டம் காலாவதியாகிவிட்டது. எனவே, இந்த சட்டத்தை நீக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.