சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படுத்தும் திட்டத்துக்கு ரூ.573 கோடி நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமக்ர சிக்ச அபியான் திட்டத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என அவர் கூறினார்.