எடப்பாடி பழனிசாமி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!!

சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராக உள்ளதாக அதிமுக தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது உண்மைக்கு மாறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறியதாக புகார் எழுந்தது. உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 

Related posts

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!