எடப்பாடி பழனிசாமிக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்..!!

சென்னை: அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி பொய்யான அறிக்கை வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2009-ல் திமுக ஆட்சிக்காலத்தில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது என ஆதித்தமிழர் பேரவை தெரிவித்தது. அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. திமுகவிற்கு புகழ் சேர்ந்துவிடுமோ என அஞ்சி, எடப்பாடி பழனிசாமி பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தனக்குத்தானே புகழ்மாலை சூட்டி அறிக்கை விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை